கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லா விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். பல நாட்களாக பட்ட கஷ்டங்களுக்கு நல்ல ஒரு விடிவு காலம் பிறக்கும். ஆன்மீக வழிபாடு மூலம் மன நிம்மதி கிடைக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆதரவு பெருகும். எதிலும் அவசரபடாமல் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். குடும்ப வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. தேக நலனில் அக்கறைகொள்வது அவசியம். பிறருடன் வாக்குவாதம் செய்வதையும், தவிர்த்தல் வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. புது பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. வீடு, வாகனத்தை சீர்படுத்த அதிகம் செலவழிக்க வேண்டிவரும். எதிரிகளால் பெரியளவில் தொல்லைகள் இருக்காது. கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் காலதாமதன்றி கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் சிக்கல் வரும். உறவினர்களிடையே இருந்த பகைமை பகைமை மாறும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. புது வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 3,4,5,6 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com