கடக ராசி நேயர்களே, இதுவரையில் கடக ராசிக்கு ஒன்பதாமிடமாகிய கும்ப ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் குரு பகவான் அங்கிருந்து இடம் பெயர்ந்து 10-ம் இடமான கர்ம ஸ்தானத்திற்கு 14-04-2022 அன்று இடம் பெயர்கிறார். (பொதுவாக 10-ல் உள்ள குரு பதவியை ஒன்றும் நாசம் செய்ய மாட்டார் கவலை பட வேண்டாம்.) கடக ராசிக்காரர்களுக்கு குருபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். உங்களுக்கு நடக்க வேண்டிய பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும். பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். வீடு நிலம் வாங்கும் யோகம் தேடி வரும். நோய்கள் நீங்கும், கடன் பிரச்சினையும் முடிவுக்கு வரும். குரு பகவான் 5ம் பார்வையாக 2மிடமான வாக்கு ஸ்தானத்தை பார்க்க போவதால் சொன்ன சொல்லை காப்பாற்றலாம். குடும்பத்தில் சந்தோஷங்களைப் பார்க்கலாம். குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை வாங்கலாம். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தலாம். உங்கள் ராசிக்கு 4ம் வீட்டை 7ம் குரு பார்வையாக பார்ப்பதால் தாயார் வகையில் அனுகூலம் உண்டு. சுக ஸ்தானத்தை ஸ்தானத்தை பார்ப்பதால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். குரு 9ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6ம் இடத்தை பார்ப்பதால் வீண் விவாதங்கள் குறைந்து பகைமை மறையும். நோய், நொடிகள் குணமாகும். இதுவரை இருந்த பண கஷ்டம் ஓரளவு தீரும். புதிதாக சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். எதிலும் அவசரப்படாமல் செயல்படவும். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். பொருளாதாரத்தில் கணிசமான வளர்ச்சி ஏற்படும். உங்கள் பேச்சில் ஒரு தெளிவு இருக்கும். எப்போதும் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. புது பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பாலத்தினரிடம் கவனமாக பழகுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம். கணவன் மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். சொந்த வீடு அமையும் யோகம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் ஒன்றை வாங்க முடியும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். மேலும் கொடுத்த கடனை திரும்ப பெறுவது கடினம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. முக்கிய வேலைகளை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் கவனம் தேவை. சற்றும் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். உற்றார், உறவினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். உடல் நலம் சீராகும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். சமுதாயத்தில் நல்ல செல்வாக்கு உள்ளவர்களாக திகழ முடியும். வருமானம் பல வழிகளில் வந்து சேரும். வரும் எதிர்ப்புகள் தானாக விலகும். புது வீடு மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த மன நிம்மதி கிடைக்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். திட்டமிட்ட பயணம் மேற்கொள்ள முடியும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவு நீங்கும். குல தெய்வ வழிபாடு தாமதன்றி நிறைவேற்ற முடியும். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது பெரியோர் அறிவுரை கேட்டு நடப்பது அவசியமாகிறது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை சிறப்பாக செய்து முடிக்க முடியும். 30.10.2023-ல் ஏற்படக்கூடிய ராகு, கேது பெயர்ச்சி மூலமாக கேது 3-லும் ராகு 9-லும் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல வாய்ப்புகளும், பொருளாதார மேன்மைகளை ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் லாபகரமாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். செய்யும் தொழில் அல்லது வேலையில் மாற்றம் நிகழும். வேலையில் கவனமும் நிதானமும் அவசியம். கடக ராசிக்கு இந்த குரு பெயர்ச்சியுடன் மற்ற கிரக சஞ்சாரத்தையும் வைத்து பார்க்கும் போது கெடு பலன்கள் குறைந்து நற்பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம் : உங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தில் அன்னதானம் செய்யவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831