RISHABAM Guru Peyarchi Palan
ரிஷப ராசி நேயர்களே, (ரிஷப ராசிக்கு குரு எட்டாவது மற்றும் பதினொன்றாவது வீட்டிற்கு அதிபதியாகும்.) குரு உங்கள் ராசிக்கு 3ம் வீடான தைரிய ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். இது வரை 2ம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் 26-05-2026 முதல் 3-ம் இடத்திற்கு செல்கிறார். குரு 3-ம் இடத்திற்கு வருவது சிறப்பு இல்லை என்றாலும் குருவின் பார்வை பலமான இடங்களில் விழுவதால் நிச்சயமாக பெரிய நன்மைகளை எதிர்பார்க்கலாம். 3ம் இடம் தைரிய ஸ்தானம் என்பதால் மன உறுதியும், தைரியமும் கூடும். எதையும் திட்டமிட்டு செய்ய பார்க்கவும். இளைய சகோதரர்களிடம் மனஸ்தாபங்கள் வரும். சேமிப்பை குறைக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்வதை தவிர்க்கவும். முக்கிய விஷயங்களை நீங்களே முன்னின்று முடிக்கப் பார்க்கவும். ஆபரணங்களை கவனமாகக் கையாளுவும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் தள்ளி போகலாம். சிறு சிறு பயணங்கள் ஏற்படும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பண வரவு சற்று சுமாரான நிலையில் தான் இருக்கும் என்பதால் செலவுகளை குறைக்க வேண்டியது அவசியம். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். எதிர்பாராத விதமாக நிறைய அலைச்சல்களை சந்திக்க நேரிடும். உங்கள் முயற்சிகளில் ஒரு சில தடங்கல் ஏற்பட்டாலும் விட முயற்சியால் அதில் வெற்றி பெற முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி கரமாக இருக்கும். மனம் போல மாங்கல்யம் அமையும். பிரிந்து இருந்த தம்பதினர் மீண்டும் ஒன்று சேருவர். கணவன் மனைவிக்குள் தம்பதிக்குள் சச்சரவுகள் வந்தாலும் அன்பும், அந்நியோன்யமும் குறையாது. வாழ்க்கைத்துணையோடு இணைந்து செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையில் ஏற்பட்ட சரிவுகளில் இருந்து மீள முடியும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். கடன் தொகை வசூலாகும். இக்காலக் கட்டத்தில் சகிப்புத் தன்மை மிகவும் அவசியம்.பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் ஏற்படுவதால் பணப் பற்றாக்குறை நீடிக்கவே செய்யும். முக்கியமான விஷயங்களில் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். முக்கிய வேலைகளை நீங்களே செய்வதுதான் நல்லது. வாழ்க்கையில் நடைபெற வேண்டிய முக்கியமான விஷயங்கள் இந்த கால கட்டத்தில் நிறைவேறும். உத்யோகத்தில் வேலைப்பளு இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். பொதுவாக பார்க்கும் போது குரு பெயர்ச்சி பலன் தரவில்லை என்றாலும் மற்ற கிரகநிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் கவலை வேண்டாம்.
பரிகாரம் : ஏழை இதய நோயாளிகளுக்கு உதவுங்கள். வாழ்க்கை கண்டிப்பாக வசந்தமாகும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831