குரு பெயர்ச்சி பலன்கள் |
2025 புத்தாண்டின் தொடக்கத்திலேயே குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சனி கிரகத்தைவிட குரு பகவான் மெதுவாக பயணிப்பார் என்பதால் மிதுன ராசியில் 13 மாதங்கள் சஞ்சாரம் செய்யவுள்ளார். குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதிவார். ஞானக்காரகன், கல்விக்காரகன், தானக்காரகன், வேலைக்காரகன், செல்வக்காரகன் என்று அழைக்கப்படும் குரு பகவவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் ஒவ்வொரு ராசியில் ஓராண்டு காலம் சஞ்சரிப்பார். வரும் 2025 புத்தாண்டில் குரு பகவான் மிதுன ராசிக்கும், அதிசாரமாக கடக ராசிக்கும் பெயர்ச்சியாகி மீண்டும் மிதுன ராசிக்கு திரும்புகிறார். மே 14 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், அக்டோபர் 18 ஆம் தேதி கடக ராசிக்கும் மாறுகிறார். நவம்பர் 11 ஆம் தேதி கடக ராசியில் இருந்து குரு வக்கிர பெயர்ச்சியாகிறார். டிசம்பர் 5 ஆம் தேதி வக்கிரப் பெயர்ச்சியில் உள்ள குரு மீண்டும் மிதுன ராசிக்குள் நுழைகிறார். அதைத்தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுன ராசியில் மீண்டும் நேர்முகமாக பெயர்ச்சியாக தொடங்குகிறார். குரு பெயர்ச்சி பலன்கள் 2025 (14 -மே -2025 முதல் -2026 வரை) ஆண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடிய குரு பெயர்ச்சி இந்த வருடம் 15-05-2025 அன்று நிகழ்கிறது. மே 15, 2025 அன்று ரிஷப ராசியிலிருந்து வெளியேறி அதிகாலை 2:30 மணிக்கு புதன் ஆட்சிக்குட்பட்ட மிதுன ராசிக்கு ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார். 9 கோள்களில் சுபகோளாக, வியாழன், குரு, பொன்னவன், தேவ குரு, தனகாரகன், புத்திகாரகன் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் குரு பகவான், ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது குடும்பம் நல்ல முறையில் இருக்கும். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதற்கு 13 மாதங்கள் அல்லது ஒரு வருடம் ஆகும். இப்படி ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதையே குரு பெயர்ச்சி என்கிறோம். குரு பார்க்க கோடி நன்மை என்றும், கோடி தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது. குரு பெயர்ச்சியினால் நன்மைகள் நடக்கும் என்று பொதுவாக நம்பலாம், எதிர்பார்க்கலாம். ஜாதகத்தில் குரு இருக்கும் ராசி, லக்னம் ஆகியவை பொருத்தும், ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார், அதுவே நடக்கும். தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும். கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குரு பகவானால் நன்மையே நடக்கும். திருமணம், புத்திர பாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வழிபடுவது எல்ல வகையிலும் நன்மை தரும். இந்த 2025 வருடம் குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். திருக்கணிதப்படி 2025 மே 14ஆம் தேதி இரவு 10:36 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். வாக்கியபஞ்சாங்கம் படி மே 15, 2025 அன்று ரிஷப ராசியிலிருந்து வெளியேறி அதிகாலை 2:30 மணிக்கு புதன் ஆட்சிக்குட்பட்ட மிதுன ராசிக்கு மாறுகிறது. பெரும்பாலும் தமிழக கோவில்களில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி எல்லாம் வாக்கிய பஞ்சாங்கப்படி தான் நடக்கிறது. குரு பகவானுக்கு முக்கிய தலமாக கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி பிரசித்தியாக கருதப்படுகிறது. குருவுக்கு பரிகாரம்: 1. நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானை வழிபடுவது சிறப்பு. 2. ஏழை எளிய மக்களுக்கு இயன்ற வரை அன்னதானம் செய்வதும் குருவுக்கு செய்யும் பரிகாரம் ஆகும். 3. வியாழக்கிழமை, பௌர்ணமி தினங்களில் அருகில் உள்ள மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவசமாதிக்கு முறையாக சென்று வழிபட்டால் குருவால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கி குரு அருள் கிடைக்கும். ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஜோதிடர் ஆலந்தூர் A.வினோத் குமார் (Ph.d Astrology) |
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831