RISHABAM
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் சிறப்பான மற்றும் அனுகூலமான பலன்களைத் தரும். உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். மனதில் பட்டதை தைரியமாக செய்து முடிக்க முடியும். சிறிய அளவிலான தவறான புரிதல்கள் ஏற்படலாம். எதிர்கால திட்டங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலைமை சீராக இருக்கும். எனினும், புதிய முதலீடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் சற்று கவனம் தேவை. ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க இது மிகச் சிறந்த நேரமாகும். புது திட்டங்கள் தொடர்பான பயணங்களுக்குத் தயாராக இருக்கவும், ஏனெனில் அவை நிச்சயமாக வெற்றியைத் தேடித்தரும். தற்போதுள்ள உடல் நலப் பிரச்சினைகள் தீரக்கூடும். மனதில் தேவையற்ற குழப்பங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் மன அமைதிக்கு வழிவகுக்கும், ஆனால் தேவையற்ற சந்தேகங்களை தவிர்ப்பது மன உளைச்சலை குறைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடியே எல்லாம் நலப்படியே நடக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். பணியிடத்தில் உயர்வுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் : 26,27,28 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com